சகல கல்விச் செயற்பாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற சர்வதேச கைத்தொழில் கண்காட்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அரச பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களை விட தனியார் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவருக்கு தொழில் சந்தையில் அதிக தேவை உள்ளது. ஏனெனில் அரச பல்கலைக்கழகத்தின் கல்விச் செயற்பாடுகள் இன்னும் புதுப்பிக்கப்படவில்லை எனவும் கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.