Header image alt text

30.06.1986இல் யாழ். கைதடியில் மரணித்த தோழர் பார்த்தி (ஏகாம்பரம் பார்த்தீபன் – திருகோணமலை) அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..

ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் மற்றும் மாகாணசபை தேர்தல்கள் இந்த ஆண்டு மற்றும் அடுத்த ஆண்டில் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். மாத்தறை கோட்டை மைதானத்தில் இடம்பெற்ற “ஒன்றாக வெல்வோம்” மக்கள் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். இந்த பேரணியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டிருந்தனர். Read more

பொது போக்குவரத்து சேவைகள் மற்றும் போக்குவரத்து சேவைகளுக்கான வசதிகளை வழங்குதல் மற்றும் பராமரித்தல் உள்ளிட்டவற்றை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச்சேவை சட்டத்தின் பிரிவு 2-இன் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more

வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் முன்பள்ளியின் புதிய கட்டிட திறப்புவிழா நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட போது…!! Read more

இணைய நிதி மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நீர்கொழும்பு பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட 31 சீன பிரஜைகளும் எதிர்வரும் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் நேற்று பிற்பகல் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இணையத்தை பயன்படுத்தி நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 200-இற்கும் அதிக வௌிநாட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர். Read more