Header image alt text

10.06.1997இல் மரணித்த தோழர் சங்கர் (தம்பிராசா ராஜதுரை) அவர்களின் 27ம் ஆண்டு நினைவுகள்

10-06-2020 அன்று ஜெர்மனியில் மரணித்த கழகத்தின் சண்டிலிப்பாய் பிரதேச முன்னாள் பொறுப்பாளர் தோழர் கௌரி (விஜயராஜா கெளரீஸ்வரன் – சண்டிலிப்பாய்) அவர்களின் நான்காம் ஆண்டு நினைவுநாள் இன்று.. 1986 பிற்பகுதியில் கழகம் தனது செயல்பாடுகளை தளத்தில் தற்காலிகமாக இடைநிறுத்தியபோது பல கிழக்கு மாகாண தோழர்களை பாதுகாப்பாக வைத்திருந்து அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைத்த அவரது உதவிகள் என்றும் நினைவுகூரத்தக்கது.
10.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர் மதி (முருகேசு ரத்தினவேல் – முகத்தான்குளம்) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று….

தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது. பதவி உயர்வு தாமதமாதல் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 6ஆம் திகதி நள்ளிரவு முதல் இரண்டு தொடருந்து முனையங்களைச் சேர்ந்த சுமார் 80 தொடருந்து இயந்திர இயக்குநர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவுடனான பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டதையடுத்து பணிப்புறக்கணிப்பை கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக தொடருந்து இயந்திர இயக்குநர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. Read more

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்திய சிரேஷ்ட அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப்பிரமாண நிகழ்விற்காக ஜனாதிபதி இந்தியா சென்றுள்ள நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்திய முதலீட்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிப்பது குறித்து இங்கு ஆராயப்பட்டதுடன், இந்த செயற்பாடுகளை ஆராய்வதற்காக விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவிருப்பதாக கலாநிதி ஜெய்சங்கர் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. Read more

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) செயலதிபர் அமரர் தோழர். முகுந்தன் (க. உமாமகேஸ்வரன்) அவர்களின் உருவச்சிலை இன்று வவுனியா நகரில் அவரது உருவச்சிலைக்குரிய பீடத்தில் ஏற்றப்பட்டது. வீரமக்கள் தினத்திற்கு முன்பாக உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட உள்ளது. Read more

09.06.1985இல் மரணித்த தோழர் சுதன் (மா.சிவஞானம்) அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று……

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலாக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்லயில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இவ்வருடம் தேர்தல் வருடம் என்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறினார். அதற்கமைய, 2025ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களுக்காக இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை இந்தியாவிற்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக அவர் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பதவியேற்பு விழா ராஷ்டிரபதி பவனில் இன்று(09) மாலை நடைபெறவுள்ளதுடன், 18ஆவது மக்களவையின் பதவியேற்பு விழாவிற்கு பல நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Read more

எமது கட்சியின் மகளீர் அமைப்பின் வருடாந்த ஒன்றுகூடலும் கௌரவிப்பும் முல்லைத்தீவு, குமுழமுனை, தண்ணீரூற்று அரிமத்தியா ஆலய மண்டபத்தில் இன்று பிற்பகல் 2.00மணியளவில் ஆரம்பமாகி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கனடா தோழர்கள் கந்தசாமி, விஜயன், குணபாலன், லண்டன் தோழர்கள் த.சிவபாலன், வேந்தன் ஆகியோர் அனுசரணை வழங்கியிருந்தார்கள். கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் திருமதி கேதினி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக புளொட் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞானபீட விரிவுரையாளர் பேராசிரியர் கணேசலிங்கம் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Read more