‘மக்கள் போராட்ட முன்னணி’ என்ற பெயரில் எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய கூட்டணியொன்று இன்று உருவாக்கப்பட்டுள்ளது. போராட்டக்களத்தில் இருந்த தரப்பினர், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சில இதனுடன் இணைந்துள்ளன. அதனடிப்படையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும் மக்கள் போராட்டக்கள அமைப்பின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினருமான வசந்த முதலிகே, Read more
அரச ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிக்க இந்த வருடத்தில் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாதென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு போதுமான நிதி கையிருப்பில் இல்லை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. அடுத்த வருடத்தில் நாட்டின் கையிருப்பு வழமை நிலைக்கு திரும்புமாயின், அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுமென நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக செயற்படுவதைத் தடுத்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் ஒகஸ்ட் முதலாம் திகதி வரை தொடர்ந்தும் நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவின் சில இடங்களில் சிறிய அளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளது. வவுனியாவில் இருந்து 23 கிலோமீட்டர் தொலைவில் மதவாச்சி, கெப்பத்திகொல்லாவ ஆகிய பகுதிகளை அண்மித்து இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நேற்றிரவு 11 மணியளவில் 2.3 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக புவிசரிதவியல், நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இதனால் சேதங்கள் எதுவும் பதிவாகவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
18.06.2021 இல் கனடாவில் மரணித்த யாழ் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டவரும், கழகத்தின் ஆரம்பகால உறுப்பினருமான தோழர் ராசா (முருகேசு சத்தியநாதன்) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் இன்று…
பாராளுமன்ற நுழைவாயில் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினரை கலைக்க பொலிஸார் நீர்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர். விரைவாக தொழில் வாய்ப்புகளை பெற்றுத்தருமாறு கோரி வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இதேவேளை, அரச சேவை ஓய்வுபெற்ற தொழிற்சங்க கூட்டமைப்பும் இன்று பத்தரமுல்லையில் எதிர்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
மன்னார் – விடத்தல்தீவில் அதானி நிறுவனம் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி பரிசீலிப்பதற்கு உயர் நீதிமன்றம் இன்று (18) உத்தரவிட்டது. விஜித் மலல்கொட, யசந்த கோதாகொட மற்றும் குமுதினி விக்ரமசிங்க ஆகிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அடங்கிய குழாமினால் இன்று இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வனஜீவராசிகள் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம் உட்பட பல தரப்பினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
ஜனாதிபதியின் பரிந்துரைக்கமைய சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்னத்திற்கு 6 மாத சேவை நீடிப்பிற்கான அனுமதியை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகியுள்ளது. ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் Volker Türk தலைமையில் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவையின் 56 ஆவது கூட்டத்தொடரில் காலநிலை மாற்றம், பாலஸ்தீன போர், உக்ரைன் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளன. இன்று ஆரம்பமாகும் 56 ஆவது கூட்டத்தொடர் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.