31.07.1988இல் வவுனியாவில் மரணித்த தோழர் காஸ்ட்ரோ (சவரிமுத்து வெள்ளிமயில்- முல்லைத்தீவு), தோழர் ஆனந்தபாபு (கிருஷ்ணகுமார்- திருகோணமலை) ஆகியோரின் 36ஆவது நினைவு நாள் இன்று….
Posted by plotenewseditor on 31 July 2024
Posted in செய்திகள்
31.07.1988இல் வவுனியாவில் மரணித்த தோழர் காஸ்ட்ரோ (சவரிமுத்து வெள்ளிமயில்- முல்லைத்தீவு), தோழர் ஆனந்தபாபு (கிருஷ்ணகுமார்- திருகோணமலை) ஆகியோரின் 36ஆவது நினைவு நாள் இன்று….
Posted by plotenewseditor on 31 July 2024
Posted in செய்திகள்
நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேக்கரவுக்கு எதிராக இடைக்காலத் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பதவிகளின் செயற்பாடுகளில் தலையிடுவதைத் தடுக்கும் வகையில் இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. Read more
Posted by plotenewseditor on 31 July 2024
Posted in செய்திகள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு சற்று முன்னர் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேரில் சந்தித்து இதனை அறிவித்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. கட்சியின் யோசனைகளை ஜனாதிபதிக்கு வழங்கிய பின்னர் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Posted by plotenewseditor on 31 July 2024
Posted in செய்திகள்
ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்களை www.election.gov.lk என்ற இணையத்தளம் மூலம் பெற்றுக் கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் அஞ்சல் வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 5ஆம் திகதி வரை மாத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும் என அந்த ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 31 July 2024
Posted in செய்திகள்
கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று அங்கு செல்வதற்காக வங்கியிலிருந்து 20 இலட்சம் ரூபாவை எடுத்துச் சென்ற இளைஞன் ஒருவர் முல்லைத்தீவு வவுனிக்குளம் பகுதியில் நேற்று (30) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு யோகபுரம் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆனந்தராசா சஜீவன் என்ற இளைஞனே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். Read more
Posted by plotenewseditor on 30 July 2024
Posted in செய்திகள்
மலர்வு 12/03/1963Posted by plotenewseditor on 30 July 2024
Posted in செய்திகள்
வற்றாப்பளை உதயசூரியன் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டுப் போட்டி 29.07.2024 இடம்பெற்றது. இதன்போது சிறார்களுக்கான பரிசுப் பொருட்களும், விளையாட்டு நிகழ்வினை நடாத்துவதற்கான ஒலிபெருக்கி, பந்தல், கதிரை உள்ளிட்ட பொருட்களும் கட்சியினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. நிகழ்வில் கட்சியின் பொருளாளர் க.சிவநேசன், கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் தவராஜா மாஸ்டர், Read more
Posted by plotenewseditor on 30 July 2024
Posted in செய்திகள்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக 92 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உறுதியளித்துள்ளனர். ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய, குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து, இந்த உறுதியை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 30 July 2024
Posted in செய்திகள்
லாவோஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இலங்கையர்களுக்கு இலவச விசா வழங்கியுள்ள நிலையில் அல்ஜீரியாவும் இலங்கை உட்பட 55 நாடுகளுக்கு இலவச விசா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளுக்கான பயண நடைமுறைகளை இலகுவாக்குவதன் மூலம் சுற்றுலாத் துறையை மேம்படுத்த முடியும் என அல்ஜீரிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இந்த புதிய இலவச விசா கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Posted by plotenewseditor on 30 July 2024
Posted in செய்திகள்
நாட்டில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் நிவாரண வேலைத்திட்டங்களுக்கு தாம் எந்த வகையிலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என பெஃப்ரல் அமைப்பு அறிக்கையொன்றினூடாக அறிவித்துள்ளது. குறித்த திட்டங்களைத் தடுக்கும் வகையில் பெஃப்ரல் அமைப்பு செயற்படுவதாக சில தரப்பினர் கருத்து வெளியிட்டு வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி மற்றும் நிவாரண வேலைத்திட்டங்களில் அரசியல் தலையீடுகளை தவிர்க்குமாறே உயர்நீதிமன்றிடம் தங்களால் கோரப்பட்டுள்ளதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. Read more