Header image alt text

தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தமிழர் தரப்புச் செயற்பாட்டாளர்களில் வயதில் மூத்தவரும், முதிர்ந்த அனுபவம் கொண்டவருமான இரா. சம்பந்தன் அவர்கள், யுத்தத்தின் பின்னர், பெரும்பான்மையான காலப் பகுதியில், தமிழ்ச் சமூகத்தின் குரலாக, தென்னிலங்கை சமூகம் மற்றும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் அங்கீகாரம் பெற்றிருந்தார்.

Read more

01.07.1999இல் மரணித்த தோழர் சேகர் (மூக்கன் உதயகுமார்) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…

கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்த பின்னர் இலங்கையின் பொருளாதார விவகாரங்களுக்கு மேலும் ஆதரவளிக்க தயாராக இருப்பதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவை இன்று நிதியமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே, திறைசேரியின் ஆசிய விவகாரங்களுக்கான பிரதி உதவிச் செயலாளர் றொபேட் கப்ரோத் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை சரியான திசையில் பயணிப்பதால் ஏனைய நாடுகள் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் தமது உடன்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Read more

ஜெர்மனி லுட்விகஸ்பேர்க் நகரில் 29.06.2024 சர்வதேச கலாச்சார நிகழ்வாக நிகழ்த்தப்பட்ட சந்தைத் திருவிழாவில் இலங்கையர் ஜனநாயக முன்னணியும் கடந்த காலங்களைப்போல் இம்முறையும் கலந்து சிறப்பித்திருந்தது. இந்நிகழ்வின்போது தமிழர் பாரம்பாரிய உணவு வகைகள் உடனுக்குடன் தயாரித்து விற்பனை செய்யப்பட்டன. மூன்றாண்டுகள் கொரானாவின் தாக்கத்தினால் நிறுத்தி வைத்திருந்த இத்திருவிழாவானது கடந்த 2022 ஜூன் மாதம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

Read more

01.07.1991இல் வவுணதீவில் மரணித்த தோழர் குருசாமி (வீமாப்போடி அருளானந்தம் – கொத்தியாவளை) அவர்களின் 33ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

இலங்கையின் தொலைத்தொடர்பு சட்டத்தை திருத்துவதற்கான திருத்தச் சட்டமூலத்திற்கு நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் அந்தக் குழு கூடிய போது இவ் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த சட்டமூலம் கடந்த மே மாதம் 10ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் நியமிக்கப்படுவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பெருந்தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் நேற்றிரவு காலமானார். அவரது மறைவிற்குப் பின்னர் நாடாளுமன்ற ஆசனத்தில் வெற்றிடமொன்று ஏற்பட்டுள்ளது. இறுதியாக இடம்பெற்ற 2020ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட சண்முகம் குகதாசன்இ இரா. சம்பந்தனுக்கு அடுத்ததாக அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு கிராமத்தில் 30.06.2024 அன்று 26 அறநெறிப் பாடசாலைப் பிள்ளைகளுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வுதவி எமது கட்சியின் வேண்டுகோளுக்கமைய எமது கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் பிரிவுப் பொறுப்பாளர் யூட்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வற்றாப்பளை வட்டார பொறுப்பாளர் டொமினிக் புஸ்பராஜா அவர்களின் அன்பளிப்பால் வழங்கப்பட்டது. நிகழ்வில் முள்ளியவளை மேற்கு வட்டார பொறுப்பாளர் சஞ்சீவன், மயூரன் மாஸ்டர், கட்சியின் உறுப்பினர்களான மோகன், ரூபன், கவிராஜ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Read more

சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்க பதில் சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்தார். சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பாரிந்த ரணசிங்க முன்னாள் பிரதம நீதியரசரான கே.ஏ.பாரிந்த ரணசிங்கவின் புதல்வராவார். Read more