லண்டனில் வசிக்கும் திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் தனது தந்தையாரான அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவை முன்னிட்டு இன்று (11.07.2024) மாலை வவுனியா திருநாவற்குளம் கிராமத்தில் தெரிவுசெய்யப்பட்ட வறுமைக் கோட்டின்கீழான 100 குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணப் பொதிகளை வழங்கியுள்ளார்.
		    
அமரர் கந்தையா தர்மலிங்கம் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவை முன்னிட்டு லண்டனில் வசிக்கும் திரு. தர்மலிங்கம் நாகராஜா அவர்கள் தனது இன்று (11.07.2024) காலை கிளிநொச்சி விவேகானந்தநகர், பாரதிபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட வறுமைக் கோட்டின்கீழான 50 குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணப் பொதிகளை வழங்கியுள்ளார்.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்கள் சேவையிலிருந்து விலகிச் சென்றதாக கருதி தபால் மூலம் அவர்களுக்கு பிரத்தியேக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பனாகொடையில் இன்று பகல் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து வௌியிடும் போதே இதனைக் குறிப்பிட்டார். பயங்கரவாத தொழிற்சங்கவாதிகளால் நாட்டின் பொதுச்சட்டம் சவாலுக்குட்படுத்தப்படுவதாக அவர் கூறியுள்ளார். 
ஜனாதிபதி சட்டத்தரணி பாரிந்த ரணசிங்கவை சட்ட மாஅதிபராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம் வழங்கியுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். சபாநாயகரின் தலைமையில் அரசியலமைப்பு பேரவை இன்று கூடியபோதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அரசியலமைப்பு பேரவையின் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதிக்கு எழுத்துமூலம் அறிவிக்கப்படும் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.