தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 35வது வீரமக்கள் தினம் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள அமரர் தோழர் க.உமாமகேஸ்வரன் நினைவு இல்லத்தில் இன்று (13.07.2024) காலை 09.30 மணியளவில் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. இதன்போது கழகத்தின் கொடி மாவட்ட அமைப்பாளர் தோழர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களால் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
அஞ்சலி நிகழ்வினைத் தொடர்ந்து தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து நினைவுச்சுடர் ஏற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

நினைவுரையினை தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர் நிகழ்த்தினார்.
நிகழ்வில் கட்சியின் தேசிய அமைப்பாளர் தோழர் பீற்றர், கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் மூர்த்தி, கட்சியின் தொழிற்சங்கப் பிரிவு பொறுப்பாளர் சு.காண்டீபன், கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் தோழர் சிவம், தோழர்கள் பரமசிவம், கொன்சால், கண்ணதாசன், சங்கர், சிவா, ஓசை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.