ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதி தேர்தல் செலவினங்களுக்காக தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதியை விடுவிக்க இயலுமென நிதியமைச்சின் சிரேஷ்ட பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, எதிர்வரும் 17ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வருகைதருமாறு நிதியமைச்சின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் அறிவுறுத்தலுக்கமைய இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
ஜனாதிபதி தேர்தலுக்கான நிதியை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.