மன்னாரின் முருங்கன் பிரதேசத்தில் 15.07.2024 திங்கட்கிழமை காலை புளொட் அமைப்பின் 35ஆவது வீரமக்கள் தினம் அனுஸ்டிக்கப்பட்டது. ஆரம்ப நிகழ்வாக நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு கழகத்தின் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு மௌன அஞ்சலியும் மலராஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ச.யோகானந்தராசா, தோழர் சிவசம்பு மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.