Header image alt text

இலங்கையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி திட்டங்களை மீள ஆரம்பிப்பதற்கான நிதியை ஜப்பான் அரசாங்கம் விடுவிக்கவுள்ளது. ஜப்பான் அரசாங்கம் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என கனடா தொடர்ந்தும் கோருவதாகக் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். கறுப்பு ஜூலையின் 41வது ஆண்டை நினைவுகூரும் வகையில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 41 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையின் கொழும்பில் தமிழ் பொது மக்களின் வர்த்தக நிலையங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் ஆரம்பமாகின. Read more

41 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜூலை கலவரம் தொடர்பில் தமிழ் மக்களிடம் அரசாங்கம் மன்னிப்பு கோரியுள்ளது. நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் அரசாங்கத்தின் சார்பில் நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மன்னிப்பு கோரியுள்ளார். 1983ஆம் ஆண்டு ஜூலை 22 ஆம் திகதி இலங்கை ஒரு மோசமான சம்பவத்தை எதிர்கொண்டது. நாம் அந்தக் காலத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கவில்லை. Read more

தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக கடமையாற்றுவதை தடுத்து உயர்நீதிமன்றத்தினால் இன்று இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம் இந்த ஆணையை பிறப்பித்தது. தேஷபந்து தென்னகோன் பொலிஸ் மாஅதிபராக நியமிக்கப்பட்டமைக்கு எதிராக கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட 08 ​தரப்பினர் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணைகளுக்கு அனுமதியளித்து இன்று இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. Read more