Header image alt text

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த, சிங்கள சமூகத்தின் இடதுசாரித் தலைவர் தோழர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களுக்கு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) தனது ஆழ்ந்த அஞ்சலிகளை தெரிவித்துக் கொள்கிறது. நவ சமசமாஜ கட்சியின் தலைவராக தனது 81ம் வயதில் காலமான அவர், சிறுபான்மை இனங்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததோடு, எப்போதும் தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார்.

Read more

திருகோணமலை பாலையூற்றுப் பகுதியில் வறுமைக் கோட்டுக்குட்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மாவு அரைக்கும் இயந்திரம் ஒன்று இன்று வழங்கிவைக்கப்பட்டுள்ளது. திருகோணமலை பாலையூற்ற, முருகன் கோவிலடி ‘சக்தி’ மாதர் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் கட்சியின் கனடா கிளைப் பொறுப்பாளர் தோழர் க.கந்தசாமி அவர்களின் நிதியுதவியில் சிங்கராசா தனூசியா என்ற குடும்பப் பெண்ணுக்கே மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சக்தி மாதர் சங்கத் தலைவி திருமதி வசந்தினி சந்திரன், தோழர்கள் பகீர், மோகன் ஆகியோரும், சக்தி மாதர் சங்கத்தினரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

Read more

குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை அடுத்த வருடம் ஜனவரி 16ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த வழக்குடன் தொடர்புடைய முன்னாள் வடமாகாணச் சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தனர்.

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்துள்ள வாகன சாரதிகளுக்கு இவ்வருடம் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் முதல் நிரந்தர சாரதி அனுமதி அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருந்த வீரசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட வேளையில் சாரதி அனுமதி அட்டைகளை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக நிரந்தர சாரதி அனுமதிப்பத்திர அட்டைகளை வழங்க முடியாததிருந்ததாக அவர் தெரிவித்தார். Read more

டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஏதிலிகளை உடனடியாகப் பிரித்தானியாவுக்கு இடமாற்றுமாறு கோரப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் வெளியுறவுத் துறை செயலாளர் டேவிட் லாம்மியினால் அதன் உள்துறை செயலாளர் யவெட் கூப்பருக்கு இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் இந்தியப் பெருங்கடல் பகுதி ஆணையாளரின் எச்சரிக்கையான கருத்துக்களைத் தொடர்ந்து, இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுமார் 1000 நாட்களுக்கு மேலாக டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 16 சிறுவர்கள் உள்ளிட்ட 60 இலங்கை ஏதிலிகளின் நிலைமை மேலும் மோசமாகியுள்ளதாக இந்தியப் பெருங்கடல் பகுதிக்கான ஆணையாளர் அறியப்படுத்தியுள்ளார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார். 76 வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகளும் நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச்சென்றதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்கான தேவையுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், தமது X தளத்தில் #CrushCorruption எனும் ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார். நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்காக இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். Read more