Header image alt text

சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் இன்றைய தினம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மக்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றதாக சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தெரிய வருவது, அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு புதிதாக வைத்திய அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் நோயாளிகளின் நலன் கருதி சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்.

Read more

பிரித்தானிய பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. பிரித்தானியாவில் நேற்று இடம்பெற்ற பொதுத் தேர்தலில் 650 தொகுதிகளிலுள்ள 40,000க்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களித்துள்ளனர். இந்த நிலையில் இதுவரையில் வெளியாகியுள்ள உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளின் படி தொழிலாளர் கட்சி 386 ஆசனங்களையும், ஆட்சியில் இருந்த கன்சர்வேட்டிவ் கட்சி 92 ஆசனங்களையும் வென்றுள்ளன. Read more

மட்டக்களப்பு – வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கிருமிச்சை பிரதேசத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளி காற்றினால் பல மரங்கள் முறிந்து வீழ்ந்ததுடன் 12 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதனால் மனித பாதிப்புகள் எதுவும் பதிவாகவில்லை. மினி சூறாவளி காற்று வீசியதையடுத்து வீடுகளின் கூரை ஓடுகள் தகரங்கள் என்பன தூக்கி வீசப்பட்டதுடன் சில வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் ஏ.அருணன் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தல் பிற்போடப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடாகும் எனத் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பில் நேற்று (04) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் தமிழ் மக்களே பாதிப்புக்குள்ளாவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆண்டுதோறும் அனுஸ்டித்துவரும் வீரமக்கள் தின 35ஆவது ஆண்டு நினைவுகள் ஜூலை 13ம் திகதிமுதல் ஜூலை 16ம் திகதி வரையிலுமான நான்கு நாட்கள் அனுஸ்டிக்கப்படுகின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் கொல்லப்பட்ட தினமான ஜூலை 13ம் திகதிமுதல் புளொட் செயலதிபர் கதிர்காமர் உமாமகேஸ்வரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட தினமான ஜூலை 16ம் திகதி வரையிலான காலப்பகுதியை வீரமக்கள் தினமாக புளொட் அமைப்பு பிரகடனப்படுத்தி ஆண்டுதோறும் அனுஸ்டித்து வருகின்றது. Read more

04.07.2003இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் ஜஸ்டின் (வைரமுத்து மேகநாதன்) அவர்களின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் இரட்டைக்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேருந்து சாரதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன், காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more

இலங்கை சுங்க பணியாளர்கள் இன்றையதினம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். சுங்கம் மதுவரி மற்றும் இறைவரி ஆகிய மூன்று திணைக்களங்களை ஒன்றிணைக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஜனாதிபதியுடனும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவுடனும் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டதாக சுங்க தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. Read more