இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்து சமுத்திரத்தில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு பணிகளின் ஒரு அங்கமாக ஐ.என்.எஸ் ஷல்கி எனப் பெயரிடப்பட்ட குறித்த நீர்மூழ்கிக் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் 64.4 மீற்றர் நீளம் கொண்டதுடன் மணிக்கு 22 கடல் மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. குறித்த நீர்மூழ்கிக் கப்பல் நாளை மறுதினம் இலங்கையிலிருந்து வெளியேறும் என கடற்படை அறிவித்துள்ளது.