அடுத்த மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக 1 கோடியே 71 இலட்சத்து 40,354 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியலின்படி, கம்பஹா மாவட்டத்தில் அதிகளவான வாக்காளர்கள் பதிவாகியுள்ளனர். அதன்படி, குறித்த மாவட்டத்தில் 18 இலட்சத்து 81,129 வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.