முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளார். அதற்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு ஹூனுப்பிட்டி கங்காராம விகாரை வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போது சர்வமத தலைவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.