ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய 519 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேய இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 503 முறைப்பாடுகளும் வன்முறை தொடர்பில் ஒரு முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதேநேரம் இதுவரையான காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 16 முறைப்பாடுகள் காவல்துறையினருக்குக் கிடைக்கப் பெற்றுள்ளதாக பதில் காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.