Posted by plotenewseditor on 22 August 2024
Posted in செய்திகள்
வடமாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பு இலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாகை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், நோயாளர்களும் வைத்தியர்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சேவையை பெற்றுக்கொள்வதில் தாமதம் அல்லது சிக்கல் ஏற்பட்டால் தொடர்புகொள்ள வேண்டிய உயரதிகாரிகளின் தொடர்பு இலக்கங்கள் ஆகியன குறித்த பதாகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். Read more