Header image alt text

அஞ்சல் வாக்குச் சீட்டுகளை இன்று முதல் அஞ்சல் நிலையங்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும், செப்டம்பர் 4ஆம், 5 ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் அஞ்சல் வாக்குப் பதிவுகள் இடம்பெறவுள்ளன. Read more

தேர்தல் விதிமுறைகளை மீறும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள், காணொளிகளை நீக்குவதாக சமூக ஊடகங்களின் இயக்குனர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் உறுதியளித்துள்ளனர். Read more

25.08.2000இல் மரணித்த தோழர் மீரான் மாஸ்டர் (கே.ஏ.சுப்பிரமணியம் சத்தியராஜன் – சுழிபுரம்) அவர்களின் 24ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

2015.08.25ல் மரணித்த தோழர் விஜயம் அவர்களின் ஒன்பதாம் ஆண்டு நினைவு நாள் இன்று…

எமது அரசாங்கத்தின் கீழ் வடக்கு கிழக்கிற்குக் காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் வழங்கப்படாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ மீண்டும் அறிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் வாயிலாக இடம்பெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற 30 வருடகால யுத்தத்தை 3 வருடங்களில் நாம் முடிவுக்குக் கொண்டு வந்தோம். போர் நிறுத்த உடன்படிக்கையை மேற்கொண்ட அரசாங்கமும் எமது நாட்டில் உள்ளது. Read more

அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான பாடசாலையின் முதல் கட்டம் நாளைத் திங்கட்கிழமை ஆரம்பமாகும் எனக் கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. Read more

இந்தியக் கடற்படையின் முன்னணி போர்க்கப்பலான ஐஎன்எஸ் மும்பை நாளைய தினம் இலங்கை வரவுள்ளது.
மூன்று நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைவரும் குறித்த கப்பலுக்குக் கொழும்பு துறைமுகத்தில் தமது சம்பிரதாய முறைப்படி வரவேற்பதற்கு இலங்கை கடற்படையினர் திட்டமிட்டுள்ளனர். Read more

அத்தியாவசிய தேவைகளுக்கான விடுமுறைகளுக்கு மாகாண தபால் மாஅதிபர்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ள முடியுமென தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால்மூல வாக்குச்சீட்டுகள் அடங்கிய முத்திரையிடப்பட்ட பொதிகள் நாளை(26) தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more