ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2 இ849 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளது. அதன்படி குறித்த பரீட்சை அன்றைய தினம் காலை 9.30 முதல் பிற்பகல் 12.15 வரை இடம்பெறவுள்ளது. எனவே குறித்த காலப்பகுதியில் ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தி நடத்தித் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் பேரணிகள் போன்றவற்றை நடத்துவதைத் தவிர்க்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக வகுப்புகள்இ விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் செப்டம்பர் 11 நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் திணைக்களம் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.