ஜனாதிபதித் தேர்தலைக் கண்காணிப்பதற்காக நாட்டிற்கு வந்துள்ள சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த சந்திப்பானது இன்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் இடையில் இடம்பெறும் முதலாவது சந்திப்பு இதுவாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.