Header image alt text

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்றைய தினம் பதவியேற்றது. இந்நிலையில் புதிய அமைச்சரவைக்கு செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மஹிந்த சிறிவர்தன நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை அமுலாக்கம், திட்டமிடல் மற்றும் சுற்றுலா அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் செயலாளராக அருணி விஜேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். Read more

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்றைய தினம் பதவியேற்றுள்ளது. இதன்படி பாதுகாப்பு உள்ளிட்ட பல முக்கிய அமைச்சு பொறுப்புகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சுக்கு மேலதிகமாக, நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, வலுசக்தி, விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீர்வளங்கள் ஆகிய அமைச்சுகள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. Read more

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்றைய தினம் பதவியேற்றுள்ளது. இதன்படி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத்துக்கு பல அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன. புத்தசாசன சமய மற்றும் கலாசார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் பொதுசன ஊடக அமைச்சு, போக்குவரத்து பெருந்தெருக்கள் துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு வெளிவிவகார அமைச்சு, Read more

மேல் மாகாண ஆளுநரான மார்ஷல் ஒஃப் த எயார் ரொஷான் குணதிலக்கவும் பதவி விலகியுள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கு முன்னதாக 7 மாகாண ஆளுநர்கள், தங்களது பதவியிலிருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கலாநிதி ஹரினி அமரசூரிய, புதிய பிரதமராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளார். பிரதமர் பதவிக்கு மேலதிகமாக அவர் நீதி, கல்வி, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீட்டு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் அவரது குழுவினருடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக சர்வதேச நாணய நிதியம்(IMF) தெரிவித்துள்ளது. இதுவரை ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள வெற்றியின் அடிப்படையில் இலங்கையின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டுசெல்வது தொடர்பில் நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளரொருவர் குறிப்பிட்டுள்ளார். Read more

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இனி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடவோ அல்லது தேசிய பட்டியல் ஊடாக உள்வரவோ மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க தேசிய விடயங்களில் கட்சியின் ஆலோசகராக மாத்திரம் செயற்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து மாபெரும் கூட்டணி ஒன்றை உருவாக்க முன்வருமாறு தேசிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் அதன் பிரதித் தலைவர் ருவான் விஜேயவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.