இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் அநுரகுமார திசாநாயக்கவிற்கு உலக வங்கி வாழ்த்து தெரிவித்துள்ளது. உலக வங்கியின் தெற்காசிய வலயத்தின் தலைவர் மார்டின் ரயிஸர் சர்வதேச நிதி கூட்டுத்தாபனத்தின் ஆசிய மற்றும் பசுபிக் வலய உபதலைவர் ரிகார்டோ புலிட் ஆகியோர் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள விசேட செய்தியில் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்குத் தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளனர்.

தற்போது இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டமைப்பதற்குத் தொடர்ச்சியான ஒத்துழைப்புக்கள் அவசியம் என்றும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் மிகவும் பாதிக்கப்படும் நிலையிலிருப்போரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதைப் போலவே புதிய நிர்வாகத்திற்கும் புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்குவிற்கும் உலக வங்கிக் குழுமம் ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.