Header image alt text

அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டதையடுத்து ஜனாதிபதியின் செயலாளராக கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

நாட்டின் அரசியலை மேலும் தூய்மைப்படுத்துவதற்கும் மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த அரசியல் கலாச்சாரத்தை உருவாக்குவதற்கும் பாடுபட தயாராக உள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று காலை பதவியேற்றதை அடுத்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். தமக்கான ஆட்சியாளர் ஒருவரைத் தெரிவு செய்வதோடு ஜனநாயக கடமை நின்றுவிடாது. Read more

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக இன்று(23) பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது.

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய இந்நாட்டின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திஸாநாயக்க அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க சற்றுமுன்னர் இதனை அறிவித்தார். தேர்தல் ஆணைக்குழுவில் சற்றுமுன்னர் இடம்பெற்ற 2024 ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

Read more

2024 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்த ஒரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெறவில்லை என தேர்தல் ஆணைக்குழு அறிவிதித்துள்ளது. இதற்கமைய, விருப்பு வாக்கு எண்ணிக்கையின் ஊடாக புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுத் தலைவர் ரத்நாயக்க தெரிவித்தார். அதன்படி, பிரதான இரண்டு வேட்பாளர்களை தவிர ஏனைய அனைத்து வேட்பாளர்களும் போட்டியில் இருந்து நீக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

Read more

தேர்தல் நிலைவரம்-

Posted by plotenewseditor on 22 September 2024
Posted in செய்திகள் 

2024 ஜனாதிபதி தேர்தலில் முதலாம் கட்ட வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்துள்ளது. இந்த முடிவுகளுக்கு அமைய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 5,634,915 வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். சஜித் பிரேமதாச 4,363,035 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நான்காவது இடத்தில் நாமல் ராஜபக்ஷ 342,781 வாக்குகளுடனும் மற்றும் பா.அரிய நேத்திரன் 226,342 வாக்களுடனும் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.

Read more

மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.
சஜித் பிரேமதாச – 45,325
அனுரகுமார திஸாநாயக்க 7,504
ரணில் விக்ரமசிங்க – 24,782
நாமல் ராஜபக்ஷ – 165
மட்டக்களப்பு மாவட்டம் மட்டக்களப்பு தேர்தல் முடிவுகள் பின்வருமாறு.

Read more

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 16 ஆயிரத்து 688 வாக்குகளைப் பெற்ற தமிழ்த் தேசிய பொதுக் கட்டமைப்பின் சுயேட்சை வேட்பாளர் பி. அரியநேத்திரன் முதலிடத்தைப் பெற்றுள்ளார். யாழ்ப்பாணத்தில் சஜித் பிரேமதாச 93,482 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலும், 84,558 வாக்குகளைப் பெற்றுள்ள ரணில் விக்ரமசிங்க மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

Read more

வன்னி தேர்தல் மாவட்டத்தில்
சஜித் பிறேமதாச 95,422 வாக்குகளையும்
ரணில் விக்கிரமசிங்க 52,573 வாக்குகளையும்
பா. அரியநேத்திரன் 36,377 வாக்குகளையும்
அநுர குமார திஸாநாயக்க 21,412 வாக்குகளையும்
கே.கே பியதாச 3,240 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Read more