Header image alt text

தென்மேற்கு வங்காள விரிகுடாவில்ரூnடிளி;நிலைகொண்டுள்ள ஃபெங்கல் என பெயரிடப்பட்டுள்ள புயல் எதிர்வரும் மணித்தியாலங்களில் மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இடையேயான கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மாலை வெளியிட்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more

கடந்த அரசாங்கத்தின் போது தன்னிச்சையாக நியமிக்கப்பட்டதாக கூறப்படும் பாராளுமன்றத்தின் பல குழுக்களை இரத்து செய்ய அல்லது மாற்றுவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இந்த குழுக்களை நியமித்ததால் பெருமளவு பணம் விரயமாவதை அரசு கண்டறிந்ததை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாராளுமன்றக் குழுக்களின் முறையான நியமனம் தொடர்பான விஷயங்களை மறுஆய்வு செய்து அதற்கான முன்மொழிவுகளை ஜனவரி 31ஆம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு ஏற்கெனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. Read more

ஆயுர்வேத திணைக்களம் உள்ளிட்ட அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்குத் தகுதியற்ற மற்றும் தங்களுக்கு நெருக்கமானவர்களை தற்போதைய அரசாங்கம் நியமித்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த இலங்கை ஆயுர்வேத மருத்துவ அதிகாரிகளின் ஒன்றிணைந்த அமைப்பின் தலைவர் வைத்தியர் விமுக்தி டி சொய்ஸா இதனைத் தெரிவித்துள்ளார். Read more

காரைதீவு ரூனெயளர் மாவடிப்பள்ளி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உழவு வண்டியொன்று அடித்துச் செல்லப்பட்டதையடுத்து காணாமல் போயிருந்த மற்றுமொரு சிறுவனும் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதன்படி, அனர்த்தத்தில் காணாமல் போயிருந்த 8 பேரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். நிந்தவூர் பகுதியிலிருந்து மதரஸா பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்களுடன் சம்மாந்துறை நோக்கிப் பயணித்த உழவு வண்டியொன்று கடந்த 26ஆம் திகதி இரவு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதில் பயணித்தவர்களில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்ததுடன் சிலர் அன்றைய தினமே மீட்கப்பட்டனர். Read more

முல்லைத்தீவு-சிலாவத்துறை பகுதியில் நேற்று பிற்பகல் தீயில் சிக்கி ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 75 வயதுடையவர் என்பதுடன், அவர் தனது மகனின் வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்துள்ளார். குளிரான காலநிலை காரணமாக வீட்டுக்குள் பற்றவைக்கப்பட்ட தீ பரவியதில் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். Read more

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய அனைத்து உத்தியோகப்பூர்வ இல்லங்களும் மீண்டும் அரசிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அரச பரிபாலனச் சபை தெரிவித்துள்ளது. தற்போதைய அமைச்சர்களுக்கு உத்தியோகப்பூர்வ இல்லங்களை வழங்குமாறு எந்தவிதமான கோரிக்கைகளும் முன்வைக்கப்படவில்லை என அந்தச் சபையின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். Read more

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகள் முன்னரை போன்றே வழங்கப்படும் எனவும், இதுவரையில் குறித்த வரப்பிரசாதங்கள் எந்தவிதத்திலும் குறைக்கப்படவில்லை எனவும் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்து தெரிவிக்கும்போது இதனைத் தெரிவித்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ இல்லங்களுக்காக 35 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநாவற்குளம் கிராமத்தைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு லண்டனில் வசிக்கும் திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதியுதவியில் இன்று உலருணவு நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் மோகன் (க.சந்திரகுலசிங்கம்), தோழர்கள் பரமசிவம், சந்திரன், ரூமி ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணப் பொதிகளை வழங்கிவைத்தனர்.

Read more

சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், காணாமல் போன ஒருவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாகவும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சீரற்ற காலநிலை காரணமாக 138,191 குடும்பங்களைச் சேர்ந்த 463, 569 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Read more

29.11.1985 அன்று திருவையாறில் மரணித்த தோழர்கள் சின்ன நியாஸ் (நா.பாலசந்திரன் – வட்டகச்சி), ஐவன் (மகாலிங்கம் – கனகபுரம்) ஆகியோரின் 39ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…