இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் புதிய தலைவராக சுனில் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி கட்டுநாயக்கவில் உள்ள அதிகாரசபையின் தலைமை அலுவலகத்தில் இன்று அவர் தமது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இந்த நிகழ்வில் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சாகர கொட்டகதெனிய மற்றும் அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டுள்ளனர்.