ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரு பெட்றிக் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது. இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மேலும் வலுவாகத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல எதிர்பார்ப்பதாகப் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத் திட்டத்தைப் பிரித்தானிய அரசாங்கம் பாராட்டுவதாகவும்இ ஊழல் மோசடிகளை ஒழிப்பதற்கு அரசாங்கத்தின் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன், அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான உதவிகளை வழங்கத் தயாரெனவும் அன்ட்ரு பெட்றிக் உறுதியளித்தார்.

உள்ளூராட்சி நிறுவனங்கள் தொடர்பில் பிரித்தானியாவில் காணப்படும் முறைமை முக்கியமானது என்றும், அந்த முறையில் ஊழல் மோசடிகளை மட்டுப்படுத்த முடியும் என்றும் சுட்டிக் காட்டிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர்,

பிரித்தானிய நாடாளுமன்ற முறைமைகள் குறித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களை தெளிவூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும் என்றும் வலியுறுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.