Header image alt text

பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உள்ளிட்ட 16 அமைச்சுகளின் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று(19) நடைபெற்றது. Read more

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளராக அமைச்சர், டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சராக செயற்படுகின்றார். புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. Read more

பொதுத் தேர்தலில் போட்டியிட்ட அரசியல் கட்சிகள், சுயேட்சை குழுக்கள்,  வேட்பாளர்கள் தங்களது தேர்தல் பிரசார செலவினங்கள் அடங்கிய வருமான செலவின விபரத் திரட்டை எதிர்வரும் டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்கு முன்னர் கையளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விபரத் திரட்டைத் தேர்தல் பெறுபேறு வெளியாகி 21 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. Read more

ருஹுனு பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் கல்விசாரா சங்கங்கள் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளன. ருஹுனு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுஜீவ அமரசேனவை அந்தப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. Read more

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை – கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமை அகற்றி காணியை உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு இராணுவ தலைமையகம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் 14 நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறும் இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது. Read more