காரைத்தீவு – மாவடிபள்ளி பகுதியில் உழவு வண்டி ஒன்று வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டதில் 6 பேர் காணாமல் போயுள்ளனர். அம்பாறை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம்.ரியாஷ் இதனைத் தெரிவித்துள்ளார். எனினும் காணாமல் போயுள்ளவர்களின் விபரங்கள் இதுவரையில் வெளியாகவில்லை.
அதேநேரம் காணாமல் போயுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கையில் கடற்படையினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.