வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநாவற்குளம் கிராமத்தைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 100 குடும்பங்களுக்கு லண்டனில் வசிக்கும் திரு தர்மலிங்கம் நாகராஜா அவர்களின் நிதியுதவியில் இன்று உலருணவு நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன. மேற்படி நிகழ்வில் ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தோழர் மோகன் (க.சந்திரகுலசிங்கம்), தோழர்கள் பரமசிவம், சந்திரன், ரூமி ஆகியோர் கலந்து கொண்டு நிவாரணப் பொதிகளை வழங்கிவைத்தனர்.
