Header image alt text

வவுனியா ஆச்சிபுரம் புனித அந்தோனியார் முன்பள்ளியில் இன்றையதினம் நடைபெற்ற ஒளி விழா நிகழ்வின்போது தோழர் ஆச்சி(சிவபாலன்) அவர்களின் நினைவாக மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் பரிசுப் பொருட்களும் வழங்கிவைக்கப்பட்டன. கனடாவில் வசிக்கும் தோழர் ஆச்சி அவர்களின் சகோதரர் சிவநாதன் அவர்கள் இந்நிகழ்வுக்கான நிதிப் பங்களிப்பினை வழங்கியிருந்தார்.

Read more

06.12.2021இல் கிளிநொச்சியில் மரணித்த தோழர் திலக் (வயிரவன் சிவபாலன் – கரியாலை, நாகபடுவன்) அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள் இன்று…..

2025ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான கணக்கு வாக்கு பணம் வாக்கெடுப்பின்றி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கணக்கு வாக்கு பணத்தின் கீழ் ஆயிரத்து 402 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையான 4 மாதத்திற்கான அரச சேவைகளைக் கொண்டு செல்வதற்கு அவசியமான நிதி இந்த கணக்கு வாக்கு பணத்தினூடாக ஒதுக்கப்படுகின்றது. Read more

ரஷ்ய – யுக்ரைன் போரில் பங்கேற்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென வெளிநாட்டலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more

நாடாளுமன்றத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜீவன் தொண்டமான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்இ நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிட்டு ஒரு ஆசனத்தைப் பெற்றுக்கொண்டது. இதில் 46,438 அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றஇ இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஜீவன் தொண்டமான் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருந்தார். Read more

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியை எதிர்க்கட்சிக்கு வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்குமாறு எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கைக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பணியகத்தின் உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லுவிற்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு டொனால்ட் லு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.