இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் 23,958 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகைதந்துள்ளதாகச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ரஷ்யாவிலிருந்தே அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த காலப்பகுதியில் ரஸ்யாவில் இருந்து 4,418 பேரும், இந்தியாவிலிருந்து 4,317 பேரும், பிரித்தானியாவில் இருந்து 1,592 பேரும் நாட்டுக்குச் சுற்றுலாப் பயணிகளாக வருகைதந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.