தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 17 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கைதான 17 மீனவர்களும் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு, முதற்கட்ட விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
அங்கு முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்து அவர்கள் இன்று மதியம் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதன்போது, எதிர்வரும் ஜனவரி மாதம் 7ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.