கனடா ழுளாயறயவில் வசிக்கும் பிரதீபராஜ் ஜிந்துயா தம்பதிகளின் செல்வப் புதல்வன் உருத்திரா தேவா (இரத்தினா, செந்தில்) அவர்களின் நான்காவது (30.12.2020.) பிறந்தநாளை முன்னிட்டு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 30.12.2024) வற்றாப்பளையில் இடம்பெற்றது. இதன்போது சூரி முன்பள்ளி, இளங்கதிர் முன்பள்ளி, நிரஞ்சன் முன்பள்ளி, செங்கதிர் முன்பள்ளி ஆகிய நான்கு முன்பள்ளிகளைச் சேர்ந்த 80 சிறார்களுக்கு கற்றல் உபகரணங்களும், கேக், சிற்றுண்டி தேநீர் என்பனவும் வழங்கப்பட்டது.
கனடா oshawaவில் வசிக்கும் தோழர் விஜயன் அவர்களின் பேரனும், பிரதீபராஜ் ஜிந்துயா தம்பதிகளின் செல்வப் புதல்வனுமாகிய உருத்திரா தேவா (இரத்தினா, செந்தில்) அவர்களின் நான்காவது (30.12.2020.) பிறந்தநாளை முன்னிட்டு புத்தகைப்பைகள் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று 30.12.2024) திருகோணமலை பாலையூற்று முருகன்கோவிலடியில் சக்தி மாதர் சங்கத்தின் தலைவி திருமதி வசந்தினி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின் அலுவலகம் 2025 ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் புதிய இடத்தில் நிறுவப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய ஜனாதிபதி நிதியத்தின் புதிய அலுவலக வளாகம் கொழும்பு 01, ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக அமைந்துள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் கட்டடத்தின் தரைத்தளத்தில் நிறுவப்படவுள்ளது.
புதிய இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவினால் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ நியமிக்கப்பட்டுள்ளார். இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே நாளை(31) ஓய்வு பெறவுள்ள நிலையில் இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.