Header image alt text

31.12.1994இல் கொழும்பில் மரணித்த எமது கட்சியின் முன்னாள் உபதலைவர் தோழர் கரவை அங்கிள் (ஏ.சி. கந்தசாமி- கரவெட்டி) அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று..
தோழர் கரவை ஏ.சி.கந்தசாமி (கரவை அங்கிள்) அவர்கள்
ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் நீண்டகாலமாக தன்னை இணைத்து செயற்பட்டு வந்தார். இடதுசாரி கொள்கையில் தீவிர பற்றுக் கொண்டு செயற்பட்டுவந்த தோழர் கரவை கந்தசாமி அவர்கள் சிங்கள சமூகத்தின் முற்போக்கு சக்திகளின் நண்பனாகவும் திகழ்ந்தார்.

Read more

ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்யும்போது பயணியின் தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளடக்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆசனங்களை முன்பதிவு செய்தவர்கள் ரயில் நிலையங்களுக்குள் பிரவேசிக்கும் சந்தர்ப்பத்தில் அல்லது ரயிலில் பயணச்சீட்டு பரிசோதனைக்குட்படுத்தப்படும் போது, Read more

ஊடகங்களுக்கு தணிக்கை விதிக்கும் எண்ணம் புதிய அரசாங்கத்திற்கு இல்லை என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர், டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இலங்கை இலத்திரனியல் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் ஊடக அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். Read more

அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நபரொருவர் அரசாங்க அச்சுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் அனுமதியின்றி உட்பிரவேசித்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்தார். Read more

பல்கலைக்கழகங்களுக்கு புதிய விரிவுரையாளர்களை இணைத்துக் கொள்ள பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவுடன் கலந்துரையாடிய பின்னர் இதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக அதன் தலைவர் பேராசிரியர் கபில செனவிரத்ன தெரிவித்தார். புதிய விரிவுரையாளர்களை இணைத்துக்கொள்வது தொடர்பில் 2 சுற்றுக் கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன. Read more

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ YouTube கணக்கு சைபர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. தற்போது அந்த கணக்கின் நிர்வாகம் முழுமையாக அதன் நிர்வாகிகளினால்(Admin) இழக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு கூறியுள்ளது. நேற்று(30) இரவு 7.30 அளவில் இந்த சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more