Header image alt text

1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ்.முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 51வது சிரார்த்ததினம் இன்றாகும். 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி படுகொலைச் சம்பவத்தின்போது வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15), பரஞ்சோதி சரவணபவன் (வயது 26), வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32), யோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52), குலேந்திரன் அருளப்பு (வயது 53), இராசதுரை சிவாநந்தம் (வயது 21), இராஜன் தேவரட்ணம் (வயது 26), சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56), சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14) ஆகியோர் உயிர் நீத்தவர்களாவர்.

Read more

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் இன்று(10) பிற்பகல் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மிரிஹானை பகுதியில் தமது அயலவர் ஒருவரின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் உதயங்க வீரதுங்க இன்று(10) கைது செய்யப்பட்டார். Read more

பிக்கு மாணவர்கள் சிலர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் அறிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தின் அனைத்து பிக்கு மாணவர்களுக்கும் நாளை(11) நண்பகல் 12 மணிக்கு முன்னதாக விடுதிகளை விட்டு வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பிக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார். Read more

வடக்கு பகுதியில் நிர்மாணிக்க உத்தேசித்துள்ள துறைமுகத்தைஇ இலங்கை முதலீட்டாளர் ஒருவருடன் இணைந்து அபிவிருத்தி செய்ய மாலைத்தீவு அதிகாரிகள் விருப்பத்துடன் உள்ளதாக இலங்கை ரூனெயளர் மாலைத்தீவு வர்த்தக சபை தெரிவித்துள்ளது. இலங்கை மாலைத்தீவு வர்த்தக சபையின் தலைவர் சுதேஷ் மெண்டிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். Read more

இஸ்ரேலில் விவசாய தொழில்துறைக்காக சென்றுள்ள இலங்கையர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக பி.ஐ.பீ.ஏ எனப்படும் அந்த நாட்டு சனத்தொகை, குடிவரவு மற்றும் எல்லை தொடர்பான அதிகார சபையின் பிரதிநிதிகள் அடுத்த வாரம் நாட்டுக்கு வருகை தரவுள்ளனர். இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். Read more

கையூட்டல் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய பணிப்பாளர் நாயகமாக உயர் நீதிமன்ற நீதிபதி ரங்க திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அவருக்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரிவு 17 (1) இன் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.