கந்தளாயைப் பிறப்பிடமாகவும், 24/27A, சகாயமாதாவீதி, அன்புவழிபுரம், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டவரும், தோழர் வக்கீல் (ஜெகமோகன்) அவர்களின் அன்புத் தந்தையுமான திரு. சின்னத்தம்பி சித்திரவேல் அவர்கள் இன்று (12.01.2025) காலமானார்.Posted by plotenewseditor on 12 January 2025
Posted in செய்திகள்
கந்தளாயைப் பிறப்பிடமாகவும், 24/27A, சகாயமாதாவீதி, அன்புவழிபுரம், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்டவரும், தோழர் வக்கீல் (ஜெகமோகன்) அவர்களின் அன்புத் தந்தையுமான திரு. சின்னத்தம்பி சித்திரவேல் அவர்கள் இன்று (12.01.2025) காலமானார்.Posted by plotenewseditor on 12 January 2025
Posted in செய்திகள்
இடைநடுவே கைவிடப்பட்டுள்ள 12 அரச வீட்டுத்திட்டங்களின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபை, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை உள்ளிட்ட பல நிறுவனங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். இந்த வீட்டுத்திட்டங்களில் சுமார் 4000 வீடுகள் அமைந்துள்ளன. Read more
Posted by plotenewseditor on 12 January 2025
Posted in செய்திகள்
உயர் நீதிமன்ற நீதியரசர்கள் நால்வர் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று(12) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது. அதற்கமைய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான சோபித ராஜகருணா, மேனகா விஜேசுந்தர, சம்பத் பீ அபேகோன் மற்றும் M.S.K.B.விஜேரத்ன ஆகியோர் உயர் நீதிமன்ற நீதியரசர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.