Header image alt text

இரத்தினக் கற்களை உள்ளாடைகளில் மறைத்து வைத்துச் சீனாவுக்குக் கொண்டு செல்ல முயன்ற சீனாவைச் சேர்ந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டதாகச் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். Read more

14.01.2000இல் மரணித்த தோழர் செல்லக்கிளி மாஸ்டர் (வடிவேல் விஐயரட்ணம் – பருத்தித்துறை) அவர்களின் 25ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

14.01.1988இல் மரணித்த தோழர்கள் ரங்கன் (பெரியகல்லாறு), ஜோன்சன் (யாழ்ப்பாணம்), சேரலாதன் (குஞ்சுக்குளம்), வேலு (வில்வராஜா – குழவிசுட்டான்), சேகர் (யாழ்ப்பாணம்) ஆகியோரின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

மிதிகம பொலிஸ் நிலையத்தின் 2 கான்ஸ்டபிள்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வௌிநாட்டு பெண்ணொருவரிடம் இருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதான கான்ஸ்டபிள்கள் கடந்த 31ஆம் திகதி வௌிநாட்டு பெண்ணொருவரிடம் இருந்து 5,000 ரூபா இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட கூட்டணி வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 340 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிட தீர்மானித்துள்ளது. இதன்படி கதிரை சின்னத்தில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பொதுஜன ஐக்கிய முன்னணியின் செயலாளரும் முன்னாள் பிரதியமைச்சருமான லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். Read more