இலங்கை விமானப்படையின் 20ஆவது தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்துல எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். நாளை மறுதினம்(29) முதல் இந்த நியமனம் நடைமுறைக்கு வரவுள்ளது. விமானப்படையின் தற்போதைய தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஸ எதிர்வரும் 29ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள நிலையிலேயே புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளது.