பிரித்தானியாவின் இந்தோ – பசுபிக் பிராந்தியத்திற்கான வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலக அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். குறித்த விஜயத்தின் போது கேத்தரின் வெஸ்ட் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்குச் சென்றதுடன், சிவில் சமூக தலைவர்களையும் சந்தித்துக் கலந்துரையாடினார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறீதரன் ஆகியோரையும் அவர் இதன்போது சந்தித்துள்ளார்.