தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டத்தின் முதன்மைப் போராளிகளில் ஒருவருமான மாவை சேனாதிராசா அவர்களின் மறைவுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். தனது இளவயதுக் காலம் முதல் இறுதி மூச்சுவரை, தமிழ் மக்களின் விடுதலை குறித்த அவரது எண்ணங்களையும் செயற்பாடுகளையும் நானும், நான் சார்ந்த அமைப்பு உறுப்பினர்களும் நன்கு அறிவோம்.
தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்தார். துறைமுகத்திலிருந்து முறையான சோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாகவும் அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் தொடர்புபட்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளின் அரசியல்வாதிகள் பகிரங்கமாக குற்றச்சாட்டினர்.