Header image alt text

19.01.1989இல் வவுனியா சமளங்குளத்தில் மரணித்த தோழர்கள் பெரிசு (நவரத்தினம் – கல்நாட்டினகுளம்), ராஜன் (சீனி – வவுனியா) ஆகியோரின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….

கிழக்கு மாகாணத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை(20) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நிலவும் பலத்த மழையுடனான வானிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். நாளை இடம்பெறவிருந்த தவணைப் பரீட்சைகளை எதிர்வரும் சனிக்கிழமை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். Read more

சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர் ஐவன் காலமானார். சுகவீனம் காரணமாக கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார். இலங்கையின் புலனாய்வு செய்தி அறிக்கையிடலில் சிறந்து விளங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இலங்கை இராணுவத்தில் பணியாற்றும் ஒரு சிப்பாய் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

சட்ட விரோதமான முறையில் ஒன்று சேர்க்கப்பட்ட பாரவூர்தி ஒன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா கைது செய்யப்பட்டுள்ளார். வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவில் ஐந்து மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கிய பின்னர் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்

கந்தர – தலல்ல பகுதியில் இன்று காலை இடம் பெற்ற பேருந்து விபத்தில் காயமடைந்த மூன்று சிறார்கள் உட்பட 61 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 6 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதிதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 9000 பேரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு தேவையான நிதி மற்றும் ஏனைய வசதிகளை அரசாங்கம் வழங்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். தற்போது சுமார் 75,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் போக்குவரத்து கட்டுப்பாடு, குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு என்பனவற்றுக்காக கடமையாற்ற வேண்டுமென பொலிஸார் தெரிவித்தனர். Read more

மன்னார் நீதிமன்றத்திற்கு அருகில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்காக காவல்துறையினர் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர். உந்துருளியில் பிரவேசித்த இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர். இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட இரண்டு சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்காக, அவர்களைப் போலவே வரையப்பட்ட இரண்டு படங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். Read more

கடந்த பொதுத் தேர்தலில் தேர்தல் செலவறிக்கையை சமர்ப்பிக்காத 74 தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன், தேர்தலில் போட்டியிட்டுத் தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 800 வேட்பாளர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பான நடவடிக்கைகள் ஏலவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

17.01.1988இல் வவுனியாவில் மரணித்த தோழர் பஞ்சாப் (பாலன் – புதுக்குளம்) அவர்களின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…