Header image alt text

04.02.1988 இல் வவுனியா முசல்குத்தியில் மரணித்த தோழர்கள் ராமர் (ஜெயா), ஞானம் (விஜயேந்திரன்), ரவி ராஜன், ஜீவராஜா, செல்டன்(ரெலா), ஆகியோரின் 37ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…

இலங்கையின் தேசிய இனமான தமிழினம், சுதந்திரம் மறுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்டு இரண்டாந்தர பிரஜைகளாக்கப்பட்டு வாழும் நிலையை வெளிக்கொணரும் வகையில், தமிழர் தாயகமான திருகோணமலை நகரில் 04.02.1957 அன்று கறுப்புக் கொடியேற்ற முனைந்த வேளையில் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகிய தமிழ்ப் பொது மகன் தியாகி நடராஜனுக்கு (வயது 22) எமது வீர அஞ்சலிகள்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று சில பகுதிகளில் எதிர்ப்பு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்ட பேரணி என்பன முன்னெடுக்கப்பட்டன. Read more

குரங்குகள் தென்னை பயிர்ச்செய்கைகளை அழிப்பதைத் தடுக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் முதல் முறையாக குரங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் எதிர்வரும் 15 ஆம் திகதி அல்லது 22 ஆம் திகதிகளில் குரங்குகள் தொகை கணக்கெடுப்பு நடத்தவுள்ளதாகத் தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜயக்கொடி தெரிவித்தார். Read more

இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் மியோன் லீ மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. கடற்படைத் தலைமையகத்தில் நேற்று (03) குறித்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன்போது, இலங்கைக்கான 26வது கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் காஞ்சன பனாகொடவுக்கு, தென் கொரிய தூதுவர் மியோன் லீ தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். Read more