தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்தவரும், வீரகேசரியின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், அதன் யாழ். காரியாலய பொறுப்பு அதிகாரியுமான மூத்த தமிழ் ஊடகவியலாளர், பாரதி இராஜநாயகம் (பாரதி) அவர்கள் தனது 62 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார். அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர், நண்பர்களுக்கு ஆறுதலைத் தெரிப்பதோடு, அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கிறோம்.
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த மாதம் 16 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட 7 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். கைதானவர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நிதி தூய்தாக்கல், பயங்கரவாதத்திற்கான நிதி பங்களிப்பை தடுப்பதற்கான செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிகார தலைமையில் இந்த செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த செயலணியின் ஏனைய உறுப்பினர்களாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணாயக்கார, தொழில் மற்றும் பொருளாதார பிரதியமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ,
நான்கு அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இன்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளதன் காரணமாக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தவகையில்,
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இன்று பயணமானார். இந்த சுற்றுப்பயணத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க துபாயில் நடைபெறும் 2025 உலகத் தலைவர்கள் உச்சிமாநாட்டிலும் உரையாற்றவுள்ளார்.