மலர்வு : 1969.09.30 உதிர்வு : 2025.02.11
வவுனியா கோயில்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இரகு வதனா அவர்கள் 2025.02.11 செவ்வாய்க்கிழமை லண்டனில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகிறோம்.

ஆரம்ப காலங்களில் காந்தீயம் அமைப்பினதும், கழகத்தினதும் செயற்பாடுகளுக்கும், வளர்ச்சிக்கும் பல வகையிலும் உதவியாகவும், ஆதரவாகவும் செயற்பட்டு வந்த குடும்பத்தைச் சேர்ந்த இவர், தோழர் துளசியின் அன்பு மனைவியும், காந்தீயம் அமைப்பில் செயற்பட்டபோது கொல்லப்பட்ட அமரர் திருமதி ராமச்சந்திரன் ராசம்மா அவர்களின் புதல்வியும், அமரர்களான தோழர்கள் நேசன், தயா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அவருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
13.02.2025