தமக்கான வேலைவாய்ப்பினை வழங்கக்கோரி தொழில் கோரும் பட்டதாரிகள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். யாழ்ப்பாண பிரதேச செயலகத்துக்கு முன்பாக இன்றைய தினம் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த பட்டதாரிகளால் கடந்த சில நாட்களாகவே போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் பல தடவைகள் போராட்டங்களை முன்னெடுத்தும் தமக்கான கோரிக்கைகளுக்கு உரியமுறையில் தீர்வு பெற்றுத்தரப்படவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளனர்.