கேள்வி :Posted by plotenewseditor on 31 March 2025
Posted in செய்திகள்
கேள்வி :Posted by plotenewseditor on 31 March 2025
Posted in செய்திகள்
கொழும்பு வலயத்தில் உள்ள உப தொடருந்து நிலையங்களில், இணைந்த சேவையில் ஈடுபட்டுள்ள சகல தொடருந்து நிலைய அதிபர்களும் இன்று நள்ளிரவு முதல் தொடருந்து நிலைய கடமைகளிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளனர். தொடருந்து நிலைய அதிபர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 31 March 2025
Posted in செய்திகள்
ரொட்டும்ப அமில என அழைக்கப்படும் திட்டமிட்ட குற்றக்கும்பல் உறுப்பினரான அமில சம்பத் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய சட்ட அமுலாக்க அதிகாரிகளால் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அந்த நாட்டின் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Posted by plotenewseditor on 31 March 2025
Posted in செய்திகள்
அம்பலாந்தோட்டை – கொக்கல்ல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். குறித்த நபர் தமது வீட்டில் இருந்தபோது இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த 30 வயதான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். Read more
Posted by plotenewseditor on 31 March 2025
Posted in செய்திகள்
சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான சட்டமூலம் எதிர்வரும் ஏப்ரல் 8 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். மாத்தறை வெலிப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 31 March 2025
Posted in செய்திகள்
உள்நாட்டு விமான சேவைகளை அதிகரிப்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துஇ நெடுஞ்சாலைகள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். பலாலி சர்வதேச விமான நிலையத்திற்குக் கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இதற்குத் தேவையான சட்டங்களைத் திருத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதன்போது தெரிவித்தார்.
Posted by plotenewseditor on 30 March 2025
Posted in செய்திகள்
கொழும்பில் ஸ்டிக்கர் ஒட்டிய சம்பவம் தொடர்பாக 22 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவத்தைத் தெளிவுபடுத்தி காவல்துறை ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த இளைஞர், ஏதோவொரு வகையில் பயங்கரவாதச் செயலொன்றை செய்வதற்குத் தயாரானவர் என்ற நியாயமான சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 30 March 2025
Posted in செய்திகள்
இந்தியாவின் திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான விமான சேவை 47 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று(30) மீண்டும் ஆரம்பமானது. திருச்சியில் இருந்து பிற்பகல் 01.25 க்கு புறப்பட்ட விமானம் பிற்பகல் 2.02 அளவில் பலாலியில் உள்ள யாழ். சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது. 27 பயணிகளுடன் வருகைதந்த விமானத்திற்கு இதன்போது வரவேற்பளிக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 30 March 2025
Posted in செய்திகள்
மாத்தளை பகுதியிலுள்ள காட்டுப்பகுதியிலிருந்து T-56 ரக துப்பாக்கியும் 02 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். T-56 ரக துப்பாக்கியையும் அதற்கான தோட்டாக்களையும் மறைத்து வைத்திருந்த சந்தேகநபரை தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
Posted by plotenewseditor on 29 March 2025
Posted in செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேச சபைகளுக்கான ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இன்றையதினம் (29.03.2025) முள்ளியவளை தண்ணீருற்று அரிமத்தியா மண்டபத்தில் நடைபெற்றது. எமது கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் க.தவராஜா மாஸ்டர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன், எமது கட்சியின் பொருளாளர் க.சிவநேசன், கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் யூட்சன்,