நாட்டின் பல பகுதிகளில் இன்று காலையும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்யும் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாக எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து எரிபொருளுக்கான வரிசை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எரிபொருள் விநியோகத்தர்களுக்கு வழங்கப்பட்ட 3 சதவீத தள்ளுபடியை ரத்து செய்ய கனியவள கூட்டுத்தாபனம் தீர்மானித்திருந்தது.

இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கம் நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் கொள்வனவு கட்டளை செய்யும் நடவடிக்கைகளிலிருந்து விலகுவதாகத் தெரிவித்தது.

இதனைத் தொடர்ந்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.