Header image alt text

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினதும் (புளொட்), அதன் மக்கள் முன்னணியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியினதும் சிரேஷ்ட உபதலைவரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி(DTNA)யின் முன்னாள் செயலாளருமான அமரர் தோழர் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவாக சுவிஸ்லாந்தில் இன்று பிற்பகல் 14.00 மணியளவில் (02.03.2025) அஞ்சலிக் கூட்டம் ஒன்று நடைபெற்றது.

Read more

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவின் முன்னாள் அதிகாரிகள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, சந்தேக நபர்கள் தலா 10 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர். Read more

கேள்வி : ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியும் ஏனைய தமிழ் அமைப்புகளும் மேற்கொண்ட தேர்தல் கூட்டணி பற்றிய கலந்துரையாடலின் இன்றைய நிலை என்ன? சில கட்சிகள் உள்வரும் செய்திகளால் உள்ளிருக்கும் சில கட்சிகள் வெளியேறுகின்றனவா?
பதில்: கடந்த 05.01.2025 அன்று வவுனியாவில் நடைபெற்ற DTNA இன் நிறைவேற்றுக்குழுக் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் முடிவில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை முகம் கொடுக்க ஏதுவாக சக தமிழ் கட்சிகளான தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசிய பசுமை இயக்கம், சமத்துவக் கட்சி, ஜனநாயக தமிழரசுக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் பேசி ஒரு இணக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பு DTNA இன் யாழ். மாவட்டத்தைச் சார்ந்த இணைத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

Read more

தண்ணீறூற்று முல்லைத்தீவை பிறப்பிடமாகவும், லண்டனை வாழ்விடமாகவும் கொண்டவரும், அமரர் தோழர் வரதப்பா (வைத்திலிங்கம் கணேசலிங்கம்) அவர்களின் அன்புச் சகோதரருமான வைத்திலிங்கம் கருணாநிதி அவர்கள் இன்று (02.03.2025) ஞாயிற்றுக்கிழமை லண்டனில் காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

Read more

மலர்வு : 1956.08.12
உதிர்வு : 2025.02.28
மன்னார் காத்தான்குளத்தைச் சேர்ந்த தோழர் டெய்சி (பஸ்ரியாம்பிள்ளை மரியம்மா) அவர்கள் (2025.02.28) வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகிறோம்.
இவர் ஆரம்ப காலங்களில் கழகத்தினது மன்னார் மாவட்ட முதல் பெண் போராளியாக கழக செயற்பாடுகளுக்கும், வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டவர். இவரது கணவரான அமரர் தோழர் எஸ்.எஸ்.ஓ (ஜோசுவான் பஸ்ரியாம்பிள்ளை) அவர்களும் ஆரம்ப காலங்களில் கழகத்தினது வளர்ச்சிக்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை.

Read more

சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு முன்னெச்சரிக்கை மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிப்பட்டுள்ளது. Read more

முன்னாள் பொலிஸ் மாஅதிபர் தேஷபந்து தென்னகோனுக்கு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ்வாறு வௌிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. 2003ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி மாத்தறை – பெலேன பகுதியிலுள்ள ஹோட்டலொன்றுக்கு அருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய அவரை கைதுசெய்யுமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று முன்தினம்(28) உத்தரவிட்டது. Read more

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான திகதி இவ்வார இறுதிக்குள் அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மிக விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். Read more

யாழ்ப்பாணம் சுதுமலை பகுதியில் 1600 போதை மாத்திரைகளுடன் இருவரை மானிப்பாய் காவல்துறையினர் கைது செய்தனர். மானிப்பாய் காவல்துறையினருக்குக் கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தகவல் கிடைத்த பின்னர் யாழ். சுதுமலை பகுதிக்குச் சென்ற காவல்துறையினர் உந்துருளியில் பயணித்த இரு இளைஞரை வழிமறித்துச் சோதனையிட்டுள்ளனர். Read more