மலர்வு : 1956.08.12உதிர்வு : 2025.02.28
மன்னார் காத்தான்குளத்தைச் சேர்ந்த தோழர் டெய்சி (பஸ்ரியாம்பிள்ளை மரியம்மா) அவர்கள் (2025.02.28) வெள்ளிக்கிழமை காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகிறோம்.
இவர் ஆரம்ப காலங்களில் கழகத்தினது மன்னார் மாவட்ட முதல் பெண் போராளியாக கழக செயற்பாடுகளுக்கும், வளர்ச்சிக்கும் அயராது பாடுபட்டவர். இவரது கணவரான அமரர் தோழர் எஸ்.எஸ்.ஓ (ஜோசுவான் பஸ்ரியாம்பிள்ளை) அவர்களும் ஆரம்ப காலங்களில் கழகத்தினது வளர்ச்சிக்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை.
தோழர் டெய்சி அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அவருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
02.03.2025